Madurai,Tamil Nadu
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிரம்மாகுமாரிகளின் தியான நிலையம் சார்பாக அண்ணாநகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் 01 முதல் 07 வரை பொதுமக்களுக்கு இப்புகை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு இலவசமாக இராஜயோக தியானப் பயிற்சி வகுப்புகள் நடத்தபெற்றது.
மதுரை நாகமலையில் 25 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆறாவது கள்ளர்நாடு எருதுக்கட்டு திருவிழாவில் 3 நாட்களுக்கு மீனாட்சி நகர் பிரம்மாகுமாரிகள் சார்பாக இராஜயோக தியானப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் 50,000 -த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 10 கிராமங்களுக்கு இராஜயோக தியான வகுப்புகள் நடத்தப்பட்டது. சகோதரி B.K.ஆஷா இந்நிகழ்ச்சிகளை நடத்தினார்.
மதுரை மஹாதானி பிரம்மாகுமாரிகள் சார்பாக ஜூன் 4 -ஆம் தேதி பெண் பயிற்சி காவலர்கள்களுக்கு மன அழுத்ததிலிருந்து விடுபட இராஜயோக தியான பயிற்சி வழங்கபட்டது. ஜூன் 5 -ஆம் தேதி ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் வருகின்ற சிவ பக்தர்களுக்கு 7 நாட்கள் இராஜயோக தியான வகுப்புகள் நடத்தபட்டது. மதுரை ஜெய்ஹிநத்புரம் வீரபத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சகோதரி B.K.அமிர்தா இந்நிகழ்ச்சிகளை நடத்தினார்.