உடுமலைபேட்டை
ஜூன் 29 -ஆம் தேதி உடுமலைபேட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பாக மன இறுக்கமற்ற மகிழ்ச்சியான வாழ்வு என்ற தலைப்பில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக உடுமலைபேட்டை அரசு போக்குவரத்து கழக கிளை மேளாலர் திரு.சவுந்தரராஜன், சென்னை மூத்த சகோதரர் B.K.சுந்தரேசன், உடுமலைபேட்டை பொறுப்பு சகோதரி B.K.மீனா ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்ரீ இராம அய்யர் கல்யாண மண்டபத்தில் மன இறுக்கமற்ற மகிழ்ச்சியான வாழ்வு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விருந்தினராக உடுமலைபேட்டை மின் வாரியம் ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் திரு.நாராயணசாமி, கோயம்பத்தூர் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர் டாக்டர்.சுந்தர் சிங், ஸ்ரீ இராம அய்யர் கல்யாண மண்டபத்தின் மேளாலர் திரு.சுப்புராமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். சென்னை மூத்த சகோதரர் B.K.சுந்தரேசன், மூத்த சகோதரி B.K.ராதிகா, உடுமலைபேட்டை பொறுப்புச் சகோதரி B.K.மீனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜுலை 30 -ஆம் தேதி உடுமலைபேட்டை Peace land -ல் பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகளுக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றது. மூத்த சகோதரி B.K.ராதிகா, மூத்த சகோதரர் B.K.சுந்தரேசன் இந்நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.