Shantivan
பிரம்மாகுமாரிகள் அமைப்பும் டெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து நாட்டின் ஒன்பது மாநிலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரம்மா குமாரிகளின் “எனது பாரதம் பசுமை பாரதம்” டெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் “ஒருவருக்கு ஒருமரம்” என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் பிரம்மா குமாரிகளின் தபோவனத்தில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு அவற்றை சிறப்பித்தார்கள்.
இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக இராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மஹாராஷ்ரா, பீகார், ஜார்கண்ட் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களின் B.K.சகோதர, சகோதரிகள் டெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையுடன் இணைந்து ஆகஸ்ட் 25 -ம் தேதி மிகப்பெரிய மரம் நடும் விழா நடத்த இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.