கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் ஹோட்டலில் இரக்ஷா பந்தன விழா நடைபெற்றது. சென்னை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் B.K.பீனா BECOME A MASTER MIND THROUGH MEDITATION என்ற தலைப்பில் உரையாற்றினார், அப்போது தியான வர்ணனை மூலம் தியான அனுபவத்தை வழங்கினார். சகோதரி B.K.கோதை அனைவரையும் வரவேற்று வித்யாலயத்தின் அறிமுகத்தையும் இராக்ஷா பந்தனத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். சுமார் 200 விருந்தினர்கள் பங்கு பெற்று பயணடைந்தனர். முக்கிய விருந்தினர்களாக KG மருத்துமனையின் தலைவர் பத்மஸ்ரீ Dr.G.பக்தவட்சலம், ஸ்ரீவாரி உள்கட்டமைப்பு தனியார் நிறுவன தலைவர்கள் திருமதி. மற்றும் திரு. பகவன்தாஸ் லண்ட், பன்னாரி அம்மன் குழுத் தலைவர் Dr.S.V.பாலசுப்ரமணியம், SHANKARA EYE DONATION -நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ Dr.R.V.ரமணி, SSVM நிறுவன நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் Dr.மணிமேகலை மோகன்தாஸ் போன்ற பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இறை ஞானம் பெற்றதோடு இராக்கியும் அணிந்து கொண்டனர்.