தூத்துகுடி
அகஸ்ட் 15-ஆம் தேதி தூத்துகுடி ௐ சாந்தி தியான மண்டபத்தில் ஊக்கமளிப்பு விழா நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக மதுவன லிட்ரேச்சர் துறையின் இராஜயோகி பிகே ரமேஷ், காட்லிவுட் ஸ்டுடியோவின் பிகே உதின் ஷாஜி, காட்லிவுட் ஸ்டுடியோவின் தமிழ் துறைத் தலைவர் இராஜயோகி பிகே ஜெயக்குமார், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.
ஆகஸ்ட் 25-ஆம் தேதி இராக்ஷா பந்தன விழா கொண்டாப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக Infosys திட்ட மேளாலர் திருமதி.அத்யாஷ நந்தூரி, தூத்துகுடி மாவட்ட மகளிர் சங்க செயளாலர் திருமதி.விஜயலெட்சுமி, காட்லிவுட் ஸ்டுடியோவின் தமிழ் துறைத் தலைவர் பிகே ஜெயக்குமார், மதுரை துணை மண்டல சேவை ஒருங்கினைப்பாளர் பிகே உமா ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் குழந்தைகள் கிருஷ்ணர் இராதை வேடம் அணிந்திருந்தினர். கிருஷ்ணர் வேடம் அணிந்திருந்த 4 வயது சிறுமி இராக்ஷா பந்தன விளக்கத்தை மிக அழகாக எடுத்துரைத்தார்.