சென்னை
சென்னை அடையார் தியான மையத்தை சார்ந்த போரூர் தியான மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரக்.ஷா பந்தன விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் அரசியல், வணிகம், கல்வி, மற்றும் கலாசாரப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் சென்னை அடையார் பொறுப்புச் சகோதரி இராஜயோகினி பி.கே.முத்துமணி அவர்கள் இரண்டு விழாவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார்.