சென்னை
செப்டம்பர் 1-ம் தேதி பிரம்மா குமாரிகள் சென்னை, அடையாறு தியான மையத்தின் வரலாற்றில் முக்கிய தினமாகும். அன்று பாப்தாதா, தாதிகள் மற்றும் யங்ஞத்தின் மூத்த சகோதர, சகோதரிகளின் ஆசீர்வாதங்களுடன் அடையாரின் கேளம்பாக்க பகுதியில் OMR IT வழித்தடத்தில் பாபாவின் சொந்த கட்டிடம் இராஜயோக பவனம் என்ற பெயரில் கட்டப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது.
இராஜயோகினி பி.கே.முத்துமணி அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து காலத்தின் அழைப்பு, ஆன்மீக இல்லம் மற்றும் இந்த ஆன்மீக கல்வி மையத்தின் அவசியம் பற்றி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திருபோரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு இதயவர்மன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.மரகதகுமாரவேல், திரு.குமாரவேல், ஜேப்பியர் சிமெண்ட் இயக்குநர் மற்றும் கல்வி உளவியலாளர் திருமதி. சரண்யா ஜெயக்குமார்
அனைத்து முக்கிய பிரமுகர்களும் திருவிளக்குகளை ஏற்றியும் தங்கள் கைகளால் செங்கல்ளை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டியும் நல்வாழ்த்துக்களை வழங்கினார்கள். பின் பாபாவின் கொடியானது தெய்விக சகோதரிகளால் ஏற்றப்பட்டது. அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரம்மா போஜன் மற்றும் இறைநினைவு பரிசுகள் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.