ஞானசரோவர்
செப்டம்பர் 21 –ஆம் தேதி ஞானசரோவர் வளாகத்தில் நீர் மற்றும் விமான போக்குவரத்துத்துறை மாநாடு “தற்போதைய தலைமுறைக்கு நற்பண்புகளை கற்பிப்பது ஒரு சவாலான செயல்” என்ற தலைப்பில் தொடங்கியது.
தேவைக்கு அதிகமாக சாதனங்களை பயன்படுத்துவதால் மனித வாழ்வு சமநிலை இழந்து வருகிறது. இந்த காரணங்களால் தற்போதைய தலைமுறையினருக்கு பழமையான நற்பண்புகளை கற்பித்து அதை நடைமுறை பெற செய்வது ஒரு சவாலான பணியாக இருக்கிறது என்று விளக்கப்பட்டது.
ஞானசரோவர் இயக்குனர் இராஜயோகினி டாக்டர் பி.கே.நிர்மலா அவர்கள் ஆன்மீக சக்தி மூலமாக வாழ்வில் நல்நியமங்களையும், செயல்களையும் சிறந்த தாக்குவதன் மூலம் பாரதம் மீண்டும் உலக குருவாக மாறிவிடும் என்று தமது கருத்துகளை வழங்கினார்கள்.
நீர் மற்றும் விமான போக்குவரத்துத்துறை தலைவர் சகோதரி மீரா அவர்கள் எங்கே சமஸ்காரம் சிறந்ததாக இருக்கிறதோ அங்கே கலாச்சாரமும் சிறந்ததாக இருக்கும் என கூறினார்.
டெல்லி சுற்றுலாத்துறை ஆராய்சி அறிஞர் சஞ்சய்குமார் சிதறிய மனதின் சக்திகளை ஆன்மீகத்தின் மூலம் ஒன்றிணைத்து செயலில் ஈடுபடுத்துவதால் கர்மசேத்திரத்தில் சிறந்த மாற்றத்தை கொண்டு வரும் திறன் அதிகரிக்கிறது என கூறினார். பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சகோதரி பி.கே.கமலேஷ், தலைமையக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் பி.கே.சந்தோஷ்குமார், குவாலியர் திரு.புனித்ராச்சார்யா, பிரிவின் நிர்வாக உறுப்பினர் சகோதரர். பி.கே.ரவீந்திரா ஆகியோரும் தங்களது பொன்னான கருத்துகளை வழங்கினார்கள்.