சாந்திவன் – அபுரோடு
ஒரிசா மாநில சட்டப்பேரவை சபாநாயகர் மாண்புமிகு சூரியநாராயணன் பத்ரா அவர்கள் இரண்டுநாட்களுக்கு பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சர்வதேச தலைமையகத்திற்கு வருகை புரிந்தார். இதன் ஒருபகுதியாக பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சாந்திவன் டைமண்ட் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது – ஆன்மிகம் மற்றும் இராஜயோகத்தின் சக்தியால் மனிதருக்குள்ளே அழகிய மாற்றம் ஏற்படுகிறது. மனிதனை சிறந்தவராக மாற்ற ஆன்மிகம் மற்றும் தியானம் மட்டுமே உற்ற வழியாக இருக்கிறது என்று கூறினார்.
அவரை தொடர்ந்து பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் நிர்வாக செயலாளர் இராஜயோகி பிகே மிருத்யுஞ்சய் அவர்கள் உரையாற்றும் போது எப்போது நம்வாழ்வில் நற்பண்புகளை கடைபிடிக்க முயற்சி செய்கிறோமோ அப்போதே நமக்கு நன்மை ஏற்படுகிறது என்றார். இந்நிகழ்ச்சியின் போது பேரம்பூர் பிரம்மா குமாரிகள் தியான மைய பொறுப்புச் சகோதரி பிகே மாலா மற்றும் துணை மண்டல பொறுப்பாளர் பிகே மஞ்சு ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக சட்டசபை சபாநாயகர், பாண்டவ பவனத்தில் உள்ள பிரம்மா பாபாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.