தூத்துகுடி
தூத்துகுடி பிரம்மாகுமாரிகள் ௐ சாந்தி தியான மண்டபத்தில் திருமூர்த்தி சிவ ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட தம்பதியினர் மற்றும் அனேக சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தூத்துகுடி தலைமை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி மற்றும் தூத்துகுடி லயன்ஸ் கிலப்பின் மண்டல தலைவி திருமதி உமா ஆறுமுகசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். முக்கிய விருந்தினர்கள் திருவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.
தீபம் ஏற்றும் நேரத்தில் தூத்துக்குடி கிளை நிலைய பொறுப்புச் சகோதரி பி.கே.அருணா அவர்கள் தியான வர்னனை அளித்தார். மேலும் விழாவிற்கு வந்த அனைத்து தம்பதியினர்களையும் தினமும் “நான் நன்றாக இருக்கிறேன், எல்லாமே எனக்கு நல்லதாகவே நடக்கின்றன, இனியும் நல்லதாகவே நடக்கும் என்று நேர்மறையான எண்ணங்களை உறுதிமொழியாக எடுக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.