அபுரோடு – ராஜஸ்தான்
குஜராத் மாநில சூரத் நகரிலிருந்து டில்லி வரை நடந்த பகத் சிங் நினைவு சைக்கிள் யாத்திரை பிரம்மாகுமாரிகளின் தலைமை நிலையமான சாந்திவனம் வந்து சேர்ந்தது. இத்தருனத்தில்த்தில் சமூக செயல்பாட்டு குழுவின் தலைவர் பி.கே. பரத், அவர்களை வாழ்த்தி பேசும்போது பகத் சிங்கை போன்ற சிந்தனைகளை இளைஞர்கள் உள்ளத்தில் உருவாக்க வேண்டும் என்றார். இயக்கத்தின் பி.ஆர்.ஓ பி.கே.கோமல் அவர்கள் சமூகத்தில் நற்பண்புகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுருத்தினார். பிறகு சைக்கில் யாத்திரை குழுவின் கன்வீனர் ஜிக்னேஷ் கல்வாடியா பிரம்மாகுமாரிகள் இயக்கம் தங்களை வரவேற்று, கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்பளித்தமைக்கு நன்றி தெரிவித்தார். பி.கே.பானு, பி.கே.மோகன் மற்றும் பல ஆன்மீக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் சைக்கிள் யாத்திரை குழு சிரோகி நகரை நோக்கி தங்கள் பயனத்தை தொடர பச்சை கொடி காட்டி வழி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பயனம் டில்லியில் முடிவடையும் போது 1800 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கும் என்பது குறிப்பிட தக்கது.