மதுரை
மதுரை நாகமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ரக்.ஷா பந்தன் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 81 குழந்தைகள் கிருஷ்ணன், ராதை, யாசோதை வேடம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். வரவேற்பு நடனம் சுபிக்.ஷா நீலம், பூஜா, சுருதி ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது. சகோதரி பி.கே.ஆஷா அவர்கள் ரக்.ஷா பந்தன் மற்றும் கிருஷ்ண ஜெயந்திக்கும் உள்ள ஆன்மீக இரகசியங்கள் மற்றும் இவ்விரண்டிற்கும் இடையேயான தொடர்பைப் பற்றி உரையாற்றினார். மேலும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் புனித கயிறு அணிவிக்கப்பட்டது, இறைநினைவு பரிசும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் சுமார் 200 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.