வாரங்கல்- தெலுங்கானா

தெலுங்கானா மாநில வாரங்கல் நகரின் சிவ் நகரில் ஆகஸ்ட் 11-ம் தேதி Safety Through Spiritual Life Skills என்ற தலைப்பில் வாராங்கல் பிரம்மா குமாரிகள் சேவை நிலையத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆன்மீகம் தான் ஸ்திரமான மனதை உருவாக்கும். மேலும் நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாக்கும் என்று மும்பையைச் சார்ந்த சகோதரர் B.K.ராகேஷ் பாட்டியா அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் வாகனத்தை இயக்குவதற்கு முன்பும் பின்பும் இறைவனை நினைத்து நன்றி சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
அப்போது பிரம்மாகுமாரிகள் கற்றுத் தருகின்ற ஞானத்தின் மூலம் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ முடியும் என்று தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் கூறினார்.