டெல்லி – ORC

டெல்லி ORC பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவி இராஜயோகினி தாதி பிரகாஷ்மணி அவர்களின் 12 –ஆவது நினைவுநாள் உலக சகோதரத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் பொருட்டு நாடெங்கிலும் உள்ள தியான மையங்களில் பல வித நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது, கூடவே பெரிய மைதானங்களில் மரங்கள் நடப்பட்டது. மேலும் இரத்த தானம் முகாம் உட்பட பல ஆரோக்கிய முகாம்களும் நடத்தப்பட்டது. இதன் தொடர்சியாக டெல்லி ௐ சாந்தி ரிட்ரிட் சென்டரில் பல தர்ம பிரதிநிதிகளோடு அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். தாதி அவர்கள் வழங்கிய அறிவுரைகளை அமல் செய்வதே அவருக்கு நாம் செய்யும் நினைவஞ்சலி என அனைவரும் ஒருமித்த குரலில் ஒலித்தார்கள். அந்நிகழ்ச்சியில் பாரதத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், படோடி ஹரி ஆலய ஆசிரம மஹா மண்டலேஸ்வர் சுவாமி தர்மதேவ மகாராஜா, மூத்த பத்திரிக்கையாளர் டாக்டர் வேதபிரகாஷ் வைதிக், யஹூதி தர்மத்தின் தர்மகுரு மாலேகர், பாரத அரசின் ஊழியர் துறை செயளர் சன்சக் சேகர், பிரபல வழக்கறிஞர் சாய்குமார் ஆகியோர் தாதி அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.