திருவாரூர்
திருவாரூர் இராஜயோக நிலையத்தில் கொண்டாடப்பட்ட இராக்ஷா பந்தன விழாவில் மூத்த இராஜயோக ஆசிரியர் சகோதரி B.K.செந்தாமரை அவர்கள் அனைத்து B.K.சகோதர, சகோதரிகளுக்கும் இராக்கி அணிவித்து ஆசிர்வாதங்களை வழங்கினார்.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருவாரூர் UP மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மூத்த சகோதரி B.K.செந்தாமரை, சகோதரி B.K.லதா, திருவாரூர் பொறுப்பு சகோதரி B.K.முத்துலெட்சுமி, சகோதரி B.K.கஸ்தூரி ஆகியோர் வழக்கறிஞர் திரு.மணிவண்ணன் உட்பட நூற்றுக்கணக்கானோருக்கு இராக்கி அணிவித்ததோடு வித்யாலயத்தின் அறிமுகத்தையும் வழங்கினார்கள்
ஆகஸ்ட் 21-ஆம் தேதி திருவாரூர் நீதி மன்ற வளாகத்தில் பார்கவுன்சிலில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலக பணியாளர்களுக்கு இராக்கி அணிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு.ஆனந்த் அவர்களுக்கு B.K.முத்துலெட்சுமி அவர்கள் இராக்கி அணிவித்து இறைஞானம் வழங்கினார்.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி திருவாரூர் நீதிபதி திருமதி. S.பொன்னம்மாள் அவர்களுக்கு சகோதரி B.K.கஸ்தூரி இராக்கி அணிவித்தார்.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி திருவாரூர் மருத்துவக்கல்லூரி DEAN. Dr.K.K.விஜயக்குமார் அவர்களுக்கு இராக்கி அணிவிக்கப்பட்டது.
துணை மாவட்ட ஆட்சியர் திருமதி.யோகஜோதி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பொன்னம்மாள் ஆகியோருக்கு சகோதரி B.K.முத்துலெட்சுமி அவர்கள் இராக்கி அணிவித்து இறைஞான பரிசினை வழங்கினார்.
ஆகஸ்ட் 23-ஆம் தேதி திருவாரூர் புலிவலம் கீதாபாடசாலையில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் இராக்ஷா பந்தன விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் திருவாரூர் பொறுப்பு சகோதரி B.K.முத்துலெட்சுமி மற்றும் சகோதரி B.K.கஸ்தூரி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.